தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், நடிகர் கமல்ஹாசன் எம்பி நேற்று விமானத்தில், சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விருதுக்காக செல்கிறேன். அதனால் இப்போது அரசியல் பேச வேண்டாம். அந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வரும்போது, நிச்சயம் அரசியல் பேசுவோம். திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி, தொகுதி பங்கீடு, போட்டியிடும் சின்னம் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இப்போதும் நடந்து கொண்டிருக்கும். தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று மக்கள்தான் சொல்லவேண்டும். நாங்கள் வெற்றியை எதிர்பார்க்கிறோம் அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: