சென்னை: திமுக, மநீம இடையே நேற்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன், மநீம துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அளித்த பேட்டி: திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரினார்கள். எங்களை பொறுத்தவரை 2019 ஆகட்டும், 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் சரி. சராசரியாக 4 சதவீதம் வாக்குகளை மநீமவின் தனி சின்னத்திலும், எங்களுடைய டார்ச் லைட் சின்னத்தில் இருந்து பெற்று இருக்கிறோம். மக்களிடம், தொண்டர்களிடம் எல்லாம் சென்றடைந்த சின்னம் டார்ச் லைட். எங்களுடைய தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திமுக குழுவிடம் வலியுறுத்தினோம். அவர்கள் தெரிவித்த கருத்துகள் எங்களுடைய தலைவர் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். தலைவர் எடுக்கும் முடிவு இறுதியானது. ஓரிரு நாளில் தலைவர் நிர்வாககுழு, செயற்குழுவை கூட்டி என்ன வழிகாட்டுகிறாரோ? அதை செயல்படுத்துவதற்கு நிர்வாக குழு, செயற்குழு, தொண்டர்கள் என அனைவரும் தயாராக இருக்கிறோம். ஓரிரு நாட்களில் மீண்டும் உங்களை சந்திக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம்: மநீம பொதுச்செயலாளர் பேட்டி
- திமுக
- Maneema
- பொதுச்செயலர்
- சென்னை
- பொருளாளர்
- டி. ஆர் பாலு
- ஏ. ஜி. மௌர்யா
- தஞ்சவேலு
- அருணாசலம்
- தட்சிணாமூர்த்தி…
