தூத்துக்குடி மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் ஆணையத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் எலுச்சூரி ரத்னாகர ராவ்(விளாத்திகுளம், தூத்துக்குடி), சோடிங்புயீஇ (திருச்செந்தூர், வைகுண்டம்), அரவிந்த்குமார் வர்மா(ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி) மற்றும் செலவினப் பார்வையாளர்களான அனுப்குமார் ஜெயின்(ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி), சிவபிரசாத் பால்(விளாத்திகுளம்), நகுல் அகர்வால்(தூத்துக்குடி, திருச்செந்தூர்), சன்னி கச்வாஹா(வைகுண்டம்), தூத்துக்குடி மாவட்ட காவல் பார்வையாளராக ஹியர்மத் சுதிர் கல்யா அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்துரையாடினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: