மேயர் உள்பட திமுக நிர்வாகிகளிடம் நேர்காணல்

தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், ஆர்தர் மச்சாது உள்ளிட்ட பலர் விருப்பமனு அளித்தனர். இவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: