நாமகிரிப்பேட்டை, மார்ச் 20: நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் பிரசித்தி பெற்ற வடபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் கோயிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மாத கடைசி வாரத்தை முன்னிட்டு, வடபத்ரகாளியம்மன், சனி பகவான், வாராகி அம்மன் மற்றும் கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு 108 சங்காபிஷேக பூஜை நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழா வையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
108 சங்காபிஷேக பூஜை
- 108 சங்கபிஷேக பூஜை
- நாமகிரிப்பேட்டை
- வடபத்ரகல்யம்மன்
- ஈஸ்வரமூர்த்திபாளையம்
- மாசி
- சனி பகவான்
- வராகி அம்மன்…
