கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்குதல் என முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். மேலும் அரசியல் பழிவாங்குதலுக்காக அறிவிக்கப்படாத ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக மம்தா குற்றம் சாட்டி உள்ளார்.
