கேரளாவின் தர்மடம் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் பினராயி விஜயன்!

 

கேரளா: கேரளாவின் தர்மடம் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில், கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் நேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவின் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வேட்புமனுவை இன்று தாக்கள் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கு முன்னர் அவர் குத்துப்பரம்பா தொகுதியில் மூன்று முறையும், பையனூரில் ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தார். தர்மடம் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வி.பி.அப்துல் ரஷீத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதேசமயம் பாஜக கே.ரஞ்சித்தை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.

 

Related Stories: