×

2018ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் பல்வேறு பணிகளில் தனியார் துறையினர் 63 பேர் நேரடி நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு தனியார் துறை, கல்வியாளர்கள், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து தகுதி பெற்றவர்களை சிவில் சர்வீஸ் தேர்வு இல்லாமலேயே நேரடியாக நியமிக்கும் முறை (Lateral Entry) என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 63 பேர் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உறுப்பினரின் கேள்விக்கு மக்களவையில் நேற்று ஒன்றிய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இதுவரை இணைச்செயலாளர், இயக்குநர், துணைச்செயலர், அளவிலான ஒப்பந்தம், பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தனியார் துறையை சேர்ந்த 63 பேர் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு 8 நியமனங்கள், 2021ல் 30 நியமனங்கள் மற்றும் 2023ம் ஆண்டில் 25 நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் அனைத்தும் ஒற்றை பணியிட கேடரில் செய்யப்பட்டுள்ளதால், இடஒதுக்கீடு சமூகப்பிரிவு வாரியான தரவுகள் பராமரிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Tags : Union Government ,New Delhi ,
× RELATED உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி 40%ஆக...