குறைந்த தூரப் பயணங்களுக்கு ரயிலை இயக்க ஹைட்ரஜன், பேட்டரி இன்ஜின்: ஒன்றிய அமைச்சர் தகவல்

 

புதுடெல்லி: ரயில்வே துறையில் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்ததன் மூலம் ஒன்றிய அரசுக்கு பெரும் நிதி மிச்சமாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘இந்திய ரயில்வேயை டீசல் பயன்பாட்டிலிருந்து மின்சாரப் பயன்பாட்டிற்கு மாற்றியதன் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்க நிலவரப்படி, நாட்டின் 99.4 சதவீத அகல ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் சரக்குகளைக் கையாளும் இரண்டாவது பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே உருவெடுத்துள்ளது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றமே இல்லாத துறையாக ரயில்வேயை மாற்ற ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் பெற மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் 170 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக டீசல் இன்ஜின் பயன்பாடு குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அதிக திறன் கொண்ட மின்சார இன்ஜின்கள் பயன்படுத்தப்படும். மேலும், குறைந்த தூரப் பயணங்களுக்கு ஹைட்ரஜன் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் இன்ஜின்களைப் பயன்படுத்தும் நீண்டகால திட்டம் சோதனையில் உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: