திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘ஏற்கனவே என்னென்னமோ கொடுத்துருக்கிறாங்க… என்னம்மா அது.. (கூட்டத்தில் ஹாட் பாக்ஸ் என்றனர்). ஆமா… ஹாட்பாக்ஸ்… அதெல்லாம் நூறு ரூபாய்க்கு கிடைக்குது… அதைப்போய் கொடுக்கிறாங்க… சேலையும் கொடுத்துருக்காங்க… எப்படிரா பாவாடை இல்லாமல் கட்டுறது என பொம்பளைங்க எல்லாம் கேட்கிறாங்க… இவ்வாறு கூறினார்.
இவரது பேச்சுக்கு பெண்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். நகைச்சுவை என்ற பெயரில் இப்படி ஆபாசமாக பேசுவதா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே, அதிமுக தரப்பில் மதுரையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர், பொதுவெளியிலேயே டோக்கன் வழங்கி ஹாட்பாக்ஸ் வழங்கி வருகின்றனர். இந்த சூழலில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு அவரது கட்சி வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘நயன்தாரா’ பற்றி சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும் பெண்களிடம் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
