போடி, மார்ச் 17: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (22). இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள தனியார் மது கடைக்கு சென்றார். அப்போது, நாகராஜ் மகன் கவுதம் என்பவர் சிலருடன் சேர்ந்து, மற்றொரு கும்பலுடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து தினேஷ்குமார் அவர்களை விலக்கிவிட்டார். பின்னர், வினோபாஜி காலனி பகுதியில் டீக்கடை அருகே தினேஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த கவுதம் மற்றும் சிலர் தினேஷ்குமாரை ஆபாசமாக பேசி மதுபாட்டிலால் அவரை தாக்கி காயப்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்தவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தினேஷ்குமாரின் அண்ணன் வெற்றி செல்வம் அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மாயாண்டி விசாரணை நடத்தினார். மேலும், கவுதம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தார்.
