சிவகங்கை, மார்ச் 17: சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி போலீஸில் தேர்தல் பிரிவு(எலெக்சன் செல்) மூலம் பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டமாக போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை டிரான்ஸ்பர் செய்யும் பணி நடந்தது. இதையடுத்து எலெக்சன் செல் தொடங்கப்பட்டது.
