NATO நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை..!!

ஈரானிடம் இருந்து ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நட்பு நாடுகள் உதவாவிட்டால், அது NATO அமைப்பின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இத்திட்டத்தை நிராகரித்துள்ள நிலையில், உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்துக்கொள்வேன் எனவும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிட்டிஷ் பத்திரிகையான Financial Times-க்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மூலம் உலகின் சுமார் 20% எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் தொடங்கிய இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஈரான் இந்த நீரிணையை முடக்கி வைத்துள்ளது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்றவை கல்ஃப் நாட்டின் கச்சா எண்ணெயை பெரிதும் சார்ந்துள்ளன என்றும், அமெரிக்காவைப் போல அல்ல அதிபர் ட்ரம்ப் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஹார்முஸ் நீரிணையின் பயனாளிகள் அங்கு எதுவும் தவறாக நடக்காமல் பார்த்துக்கொள்ள உதவ வேண்டும். உதவி இல்லையென்றால் அல்லது எதிர்மறையான பதில் வந்தால், நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ 31 நாடுகளைக் கொண்ட ராணுவ கூட்டணி. அமெரிக்கா அதன் மிகப்பெரிய உறுப்பினராக இருந்து ராணுவ திறன், நிதி, தலைமை ஆகியவற்றில் முன்னிலை வகிக்கிறது. நாங்கள் உக்ரைனுக்கு உதவினோம். ஆனால் இப்போது அவர்கள் நமக்கு உதவுவார்களா என்பதை பார்ப்போம். நான் நீண்ட காலமாக சொல்லி வருவது: நாங்கள் அவர்களுக்கு இருப்போம், ஆனால் அவர்கள் நமக்கு இருக்க மாட்டார்கள் என்று டிரம்ப் விமர்சித்தார்.

Related Stories: