சென்னை: ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, ”தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால், அரசியல் கட்சிகள் நேரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வதையே விரும்புகிறார்கள். ஏஐ தொழில்நுட்பம் மூலம் சமூகவலைதளங்களில் போலியான வீடியோக்கள் வருவதை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், சனி, ஞாயிறு (4 மற்றும் 5ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதன்படி 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
