சென்னை: சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் பலி. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
