×

சாலை சீரமைப்பு போக்குவரத்து திடீர் மாற்றம்

ஈரோடு, மார்ச் 16: ஈரோட்டில் சாலை சீரமைப்பு பணியால் நெடுஞ்சாலைத்துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். தென் மாவட்டங்களில் இருந்தும், வெள்ளகோவில், முத்தூர், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஈரோடு மாநகருக்குள் வரும் நாடார்மேடு வழியே வர வேண்டும். நாடார்மேடு பகுதியில் சாலையின் நடுவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் டிவைடர்களை வைத்து, சாலை சீரமைப்பு பணி நடக்கிறது.

இதனால், மாற்றுப்பாதைகளான, சாஸ்திரி நகர், மேம்பாலம், சென்னிமலை சாலை வழியே ஈரோடு மாநகருக்குள் வாகனங்கள் சென்றன. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நெடுஞ்சாலைத்துறையின் முன்னறிவிப்பும் இன்றி வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டதால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போக்குவரத்து போலீசாரும் பல்வேறு சிரமத்திற்குள்ளாகினர்.

 

Tags : Erode ,Vellakovil ,Muthur ,Karur ,Trichy ,Nadarmedu ,
× RELATED பவானிசாகர் தொகுதியில் தேர்தல் பணியில் தீவிரம்