அந்தியூர்,மார்ச்16: அந்தியூர் ரவுண்டானா பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.பேரூராட்சித் தலைவர் எம்.பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார்.
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், பேரூராட்சி துணைத் தலைவர் எ.சி.பழனிச்சாமி, பேரூர் கழகச் செயலாளர் காளிதாஸ்,அத்தாணி செந்தில்கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உள்பட அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், கொமதேக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
