ஜெயங்கொண்டம், மார்ச் 16: ஜெயங்கொண்டம் அனைத்து மகளில் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, ஜெயங்கொண்டம் உட்கோட்ட டிஎஸ்பி தினேஷ்குமார் வழிகாட்டுதலின்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுக்களை விரைந்து முடிக்கும் நோக்கில், இன்ஸ்பெக்டர் நாகவள்ளி தலைமையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 3 மனுக்கள் மற்றும் 7 நடப்பு தாள்கள் விசாரணை முடிக்கப்பட்டது.
