சென்னை: வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து நிலைமையை ஒன்றிய அரசு உடனடியாக சீர்செய்ய வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் முதலமைச்சரின் பதிவில்; “வெளியுறவுக் கொள்கையிலும் FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.
இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
