புழல்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு புழல் சிறைக்கு கொண்டுவரும்போது ஆசனவாயில் கஞ்சா, பேதை பவுடர் கடத்திவந்த கைதிகளிடம் விசாரணை நடத்துக்கின்றனர். சென்னை புழல் விசாரணை சிறையில் 3500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்களத்தூரை சேர்ந்த புவனேஸ் (26), முடிச்சூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்குமார் (26), விஜய் (20) ஆகியோர் கடந்த 10ம் தேதி முதல் சிறையில் உள்ளனர்.
இந்தநிலையில், நாகப்பட்டினம் பகுதி சேர்ந்த ஆகாஷ் (20), சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (24) ஆகியோரை சிறைக்காவலர்கள் சோதனை செய்தபோது 20 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பவுடர்கள், 6 பீடி, ஒரு லைட்டர் வைத்திருந்தனர். இவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது புவனேஷ், சரண்குமார், விஜய் ஆகியோர் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரிடம் விசாரித்தனர். ‘’நீதிமன்றத்தில் இருந்து வரும்போது ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்தோம்’ என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, புழல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
