ஜெயங்கொண்டம், மார்ச் 14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்ட்ட கபடி ஆடுகளம் திறப்பு விழா நடைபெற்றது உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் வரவேற்றார்.
கல்லூரி முதல்வரும் முனைவருமான ஜெயச்சந்திரன் தலைமையுரை ஆற்றினார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க கண்ணன் கலந்து கொண்டு கபடி ஆடுகளத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
