×

தொழிற்சாலைகளில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க உள்ளக புகார் குழு அமைக்க உத்தரவு

 

கோவை, மார்ச் 14: கோவையில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் உள்ளக புகார் குழு அமைக்க கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் தடுக்க, தடை செய்ய மற்றும் தீர்வு காண சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.

இந்த சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்ட விவரங்கள், அந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை www.tnswd-poshicc.tn.gov.in மற்றும் https://shebox.wcd.gov.in ஆகிய இணையதளங்களில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Tags : Coimbatore ,Coimbatore Industrial Safety and Health ,Saravanan ,
× RELATED கோவை மேற்கு புறவழிச்சாலை முதற்கட்ட பணி நிறைவு