டெல்லி: வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று என ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். ஐ.நா. சபையில் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தாக்குதலில் 1300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டதையும் 168 குழந்தைகள் மரணித்ததையும் கண்டிக்கவில்லை.
