ரூ.45.40 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

சேந்தமங்கலம், மார்ச் 12: புதுச்சத்திரம் அடுத்த திருமலைப்பட்டியில் ரூ.45.40 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் ஒன்றியம், திருமலைப்பட்டி ஊராட்சி கஸ்பா பகுதியில் ரூ.45.40 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நேற்று நடந்தது. வட்டார அட்மா குழு தலைவர் கௌதம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா முன்னிலை வகித்தார். ராமலிங்கம் எம்எல்ஏ கலந்துகொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். திருமலைப்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால், சுகாதார வளாகம் உள்ளிட்டவை அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திருமலை பட்டியில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை வரை நெடுஞ்சாலை துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என எம்எல்ஏ தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் புகழேந்தி, அன்புமணி, பழனிசாமி, கண்ணன், சசிகுமார், லிங்கப்பன், விக்னேஸ்வரன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: