சென்னை: கட்சி உரிமை தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். அன்புமணிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
