×

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில் வழங்கப்படும் உணவு நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல்: ரயில்வே அதிகாரிகள்

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில் வழங்கப்படும் உணவு நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு இடங்களில் கேஸ் சிலிண்டர் பெறவும் பெட்ரோல் நிலையங்களில் ஆட்டோக்கள் கேஸ் நிரப்பவும் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நேற்று முதலே உணவக நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்து வருகின்றன. பல ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு விலையேற்றம் செய்யப்படுகிறது. இதனால் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிலிண்டர் தட்டுப்பாட்டால் ரயில்களில் வழங்கப்படும் உணவு நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவோடு சேர்த்து முன்பதிவு செய்பவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. நீண்ட தூரம் செல்லும் ரயில்கள், வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மற்ற ரயில்களிலும் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப உணவு பெறலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,India ,Israel ,Iran.… ,
× RELATED சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...