×

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா; போக்குவரத்து கடும் பாதிப்பு

கோத்தகிரி, மார்ச் 12: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை, காபி தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் தற்போது பலாப்பழங்கள் காய்க்க துவங்கியுள்ளது. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து, குஞ்சப்பனை, கோழிக்கரை, முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து ஒற்றை காட்டு யானை பிரிந்து இரவு நேரத்தில் முள்ளூர், மாமரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வரத்தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு முள்ளூர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒற்றை காட்டு யானை உலா வருவது வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்துள்ளது. எனவே சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பணி: லெப்டினென்ட் (என்சிசி- ஸ்பெஷல் என்ட்ரி)- 124வது கோர்ஸ்.
மொத்த காலியிடங்கள்: 70. இதில் 7 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. வயது: 01.07.2026 தேதியின்படி 19 முதல் 25க்குள்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று என்சிசி தேர்வில் குறைந்தபட்சம் ‘பி’ கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசியில் 2 வருடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
ேபாரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை. ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான காலியிடத்திற்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி: உயரம்- 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ., 10.30 நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-6, புஷ்அப்ஸ்-30, புல்அப்ஸ்-40 எடுத்தல் மற்றும் ஸ்குவாட்ஸ் லங்க்ஸ் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும். மேலும் 25 மீட்டர் நீந்துதல், கயிறு ஏறுதல் ஆகிய உடற்திறன் சோதனைகளிலும் வெற்றி பெற வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வருகிற அக்டோபரில் எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும். அதன்பின்னர் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இ.மெயிலில் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஏசி-3 டயர் ரயில்/பஸ் கட்டணம் வழங்கப்படும்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2026.
1. ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னி): 3 இடங்கள். சம்பளம்: ரூ.31,000- ரூ.1,00,000. தகுதி: மைனிங்/ மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ்சால் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட படிப்புக்கு இணையான படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பானது ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையத்தில் பெற்றதாக இருக்க வேண்டும்.

Tags : Kotagiri-Mettupalayam road ,Kotagiri ,Kotagiri-Mettupalayam mountain ,Kotagiri-Mettupalayam ,
× RELATED காட்டேரி பேருந்து நிலையத்தில் தீ வைத்து ரகளையில் ஈடுபட்டவரால் பரபரப்பு