×

2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் திருநங்கைகளை தலைவர்களாக கொண்ட குடும்பங்களும் சேர்க்கப்படும்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்கட்டத்தில், குடும்ப தலைவரின் பெயர், பாலினம்(திருநங்கை உள்பட) மற்றும் குடும்பத்தின் நிலை உள்ளிட்ட குடும்ப விவரங்கள், வீட்டு வசதிகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பில் முதன்முறையாக திருநங்கைகள் குடும்ப தலைவராக உள்ள குடும்பங்கள் மற்றும் சாதிவாரியான தரவுகள் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பு முழுமையான டிஜிட்டல் முறையில், மொபைல் ஆப் மூலம் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் தரவுகளை தாங்களாகவே பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

Tags : New Delhi ,Rajya ,Sabha ,Union Minister of State for Home Affairs ,Nityanand Rai ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தின் 22வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்!!