மும்பை: ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஐஎக்ஸ்938) என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் மொத்தம் 133 பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்தனர். தாய்லாந்து நேரப்படி காலை 11.40 மணிக்கு புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் முன்பக்க சக்கரம் பலத்த சேதமடைந்து வெடித்தது. இதனால் பயணிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 133 பயணிகளும் காயம் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
