பாங்காக்: தாய்லாந்தின் புக்கெட் விமான நிலையத்தில் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. புக்கெட் விமான நிலையத்தில் இறங்கியபோது ஏர் இந்தியா விமானம் தரையில் மோதியது. விமான நிலைய ஓடுதளத்தில் மோதி தரையிறங்கியதால் லேண்டிங் கியர், முன்சக்கரம் சேதம் ஆகியுள்ளது. விமான மீட்பு நடவடிக்கை காரணமாக அந்த ஓடுதளம் மாலை 6 மணி வரை மூடப்படுகிறது.
