×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

 

ஈரோடு, மார்ச் 11: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி, வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
முதல் தேர்வாக தமிழ் மொழி மற்றும் இதர மொழி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 353 அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த 24,430 மாணவ-மாணவிகளும், அதேபோல், தனித்தேர்வர்கள் 856 பேரும் எழுத உள்ளனர்.
இதில், பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 118 மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 7 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், விபத்தினால் பாதிப்படைந்த மாணவ-மாணவிகள் என 687 பேர் தேர்வு எழுத வசதியாக ஸ்கிரைப் (சொல்வதை கேட்டு எழுதுபவர்கள்) மூலம் தேர்வு எழுத உள்ளனர்.
118 முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் 125 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடு மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுக்க 173 பேர் கொண்ட பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மாவட்டம் முழுக்க தனித்தனியாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Erode ,Tamil Nadu ,Erode… ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடு...