×

சாலையோரத்தில் உலா வந்த காட்டு யானை

 

கோவை, மார்ச் 11: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன.
குறிப்பாக தடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோயில் பகுதிக்குள் நேற்று மாலை ஒற்றை ஆண் காட்டு யானை நுழைந்தது. அப்போது மலையடிவார வனப்பகுதிக்குள் இருந்த யானை, அங்கிருந்த இலைதழைகளை சாப்பிட்டது.

Tags : Coimbatore ,Western Ghats ,Coimbatore district ,Thadakam ,Kanuvai… ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை...