சென்னை: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக திமுக இளம்பேச்சாளர்களை இம்மாபெரும் மாநாட்டில் மேடை ஏற்றி பேச வைத்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் வெல்லும் தமிழ்ப் பெண்களின் எழுச்சி என்ற தலைப்பில் உமாராணியும்,, திராவிட மண்ணில் பாசிசம் வீழும்!- தமிழ்நாடு அணி Vs டெல்லி அணி என்ற தலைப்பில் அஸ்வின் (எ) தாயுமானவனும், வெற்றிகளின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! என்ற தலைப்பில் செ.கபில்சாயும், எல்லோருக்கும் எல்லாம்-சொல் அல்ல செயல் என்ற தலைப்பில் வர்ஷா, ஏன் வேண்டும் திராவிட மாடல் 2.0- நம் கனவு 2030 என்ற தலைப்பில் செ.ஜோதியும் அனல் பறக்கும் வகையில் பேசினர்.
