×

மனைவியை நடுத்தெருவுல விட்டுட்டு மற்ற பெண்களுக்கு சீர்வரிசையா? விஜய் மீது நாம் தமிழர் கட்சி சாடல்

 

நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் சீலனுக்கு ஆதரவாக குலசேகரம் அரசமூடு சந்திப்பில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா பேசினார். அவர் பேசுகையில், ‘‘25 ஆண்டு காலம் தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை நடுரோட்டுல விட்டு விட்டு ஒருவர் மற்ற பெண்களுக்கு சீர்வரிசை தருகிறேன் என்கிறார். அதுவும் ஒரு பவுன் ஒரு லட்சம் விற்கும் நிலையில் ஒரு பவுன் தாலிக்கொடி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

கட்டிய மனைவியை நட்டாற்றுல நிற்க விட்டு விட்டு மற்ற பெண்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லும் உன்னை மக்கள் எப்படி நம்புவார்கள்? எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்குது பாருங்க. கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கில்லை. அவள் கண்ணீர் வடித்து துடிக்கிறாள். நீ மற்ற பெண்களுக்கு நல்லது செய்து என்ன புண்ணியம் கிடைக்க போகிறது. மக்களுக்கு எமனாக உள்ள வாகனங்கள் ஒன்று விஜய் வைத்திருப்பது. மற்றொன்று டாரஸ் லாரிகள்’’ என்றார்.

Tags : Naam Tamil Party ,Vijay ,Kulasekaram Arasamudu Junction ,Padmanabhapuram ,Seelan ,Karthika ,
× RELATED பனையூரில் விஜய் நேர்காணல் 60...