சென்னை : தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடையின்றி எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கு தடையின்றி சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
