திருவனந்தபுரம்: உலகக் கோப்பை டி20யில் கடைசி லீக் போட்டி, அரையிறுதி, நியூசிலாந்துடன் கடைசியாக நடந்த இறுதிப் போட்டி ஆகிய மூன்றிலும் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அரை சதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணியாக திகழ்ந்தார்.
இந்நிலையில், அவருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த செய்தியை, கேரள பொதுக்கல்வித் துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி நேற்று உறுதி செய்தார். சஞ்சு சாம்சன், கேரளாவின் விழிஞ்சியம் நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
