- சர்வதேச மகளிர் தினம்
- கேஎம்ஜி
- கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- வேலூர்
- கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தன்னாட்சி
- மகளிர் மன்றம்
- இந்திய வெளிநாட்டு வங்கி
- வேலூர் வலயம்
- 2026…
வேலூர், மார்ச் 10: கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மகளிர் மன்றம் மற்றும் வேலூர் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சர்வதேச மகளிர் தினம்-2026 நேற்று கே.எம்.ஜி. கல்லூரியில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் சி.தண்டபாணி தலைமை தாங்கினார். கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி.இராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா. டி.தேன்மொழி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் ஜி.சசிக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் வேலூர் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த மேலாளர் என்.இராஜசேகர், வேலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் எம்.பிரியா ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து இன்றைய பெண்களின் முன்னேற்றம், தைரியம், திறமை மற்றும் வலிமை குறித்து பேசினர். மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மற்றும் குடியாத்தம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர்கள், துணை மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்களான வினய், தையிசிவராம், நீலப்பூ கனகதுர்கா பவானி, மினு உன்னி கிருஷ்ணன், அஸ்வதே, சுர்பிஜெயின், ஹரிஷா பாமுலப்பட்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் மகளிர் மன்ற உறுப்பினர் கே.எஸ்.கருணா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க உறுப்பினர்கள் ஜா.திவ்யா மற்றும் இரா.அனிதா லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
