சிபிஐ அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சிபிஐயின் மறுசீராய்வு மனு மீது முடிவெடுக்கும் வரை ED வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்த நிலையில் சிபிஐ விசாரணை அதிகாரி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: