இயந்திர மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என்று மனிதர்களால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இப்படி மனிதர்களால் அழிக்கப்படும் விலங்கினங்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், வனப்பரப்பின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பவை. இவற்றை அழிப்பதால் எதிர்காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை மனிதகுலம் சந்திக்க நேரிடும் என்று சூழலியல் மேம்பாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இதில் விலங்குகளுக்கும் பங்கு உள்ளது.
வனங்களுக்கும் பங்கு உள்ளது. ஆனால் நாம் வனங்களை சொந்தம் கொண்டாடி அவற்றை அழித்து வருகிறோம். இதன்காரணமாக வனத்தை ஆதாரமாக நம்பி வாழும் அரிய விலங்குகள் அழிவின் பிடியில் சிக்கி நிற்கிறது. அழிவென்பது அனைத்து உயிர்களுக்குமான ஒன்று தான். ஆனால் நமது அலட்சியத்தால் நீரின்றி, உணவின்றி விலங்குகள் அழிவது மிகவும் அபாயகரமான ஒன்று. ஏனெனில் அரியவிலங்குகளின் அழிவு என்பது இயற்கைக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். வனவிலங்குகளை நாம் உற்பத்தி செய்ய முடியாது. ஒரு முறை அது மறைந்துவிட்டால் அந்த இடத்தை நாம் நிரப்ப முடியாது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் தரவுகளின் படி உலகளவில் 8400 வகையான காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.
சில அரிய விலங்கினங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, உதகமண்டலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் புலிகள், யானைகள், மான்கள் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக மனிதர்களின் அத்துமீறல்களால் இறப்பை தழுவி வருகிறது. இந்த வகையில் அழிந்து வரும் வனவிலங்குகளை காப்பதற்காகவும், இயற்ைக சமநிலை மாறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டு தோறும் மார்ச் 3ம்ேததி உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தவகையில் நேற்று (3ம்தேதி) உலகவனவிலங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வனஉயிரியல் ஆர்வலர்கள் கூறியதாவது: நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களில் 40சதவீதமும், பாலூட்டிகளில் 25சதவீதமும், தாவரங்கள் 34சதவீதமும், பறவைகள் 14சதவீதமும், பவளப்பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இது மொத்த வனவிலங்குகளின் எண்ணிக்கையில் 27சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயற்கையின் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் பாறு கழுகுவகைகள் உலகளவில் 99சதவீதம் அழிந்துவிட்டது. இதை நமது தமிழ்நாட்டில் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைத்து வருகிறோம். இந்திய அளவில் புலிகள், சிறுத்தைகள், நரிகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளின் பட்டியலில் உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் மாநில விலங்கான நீலகிரி வரையாடு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ளது.இயற்கையும் விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியலை சிறப்பாக மாற்றுகிறது.
மண்செழிப்பதற்கு மழை வேண்டும். அந்த மழை பொய்க்காமல் இருப்பதற்கு காடுகள் வேண்டும். மழை பொய்க்காமல் இருந்தால் தான், மனித குலத்திற்கான உணவு தானியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். எனவே மழைக்கு வழிவகுக்கும் காடுகள் உயிர்ப்புடன் இருக்க வனவிலங்குகள் கண்டிப்பாக வேண்டும். இதை மட்டும் மனிதர்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். வனவிலங்குளே காடுகளில் நடந்து மனிதர்கள் செல்வதற்கான வழித்தடத்தை உருவாக்குகிறது. அவற்றின் கழிவுகள் மண்ணை பல மடங்கு வளப்படுத்தி வைக்கிறது என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. நாம் அழிவின் பிடியில் உள்ள விலங்கினங்களை காப்பாற்றுவதை விட, அவற்றுக்கு தொல்ைல கொடுக்காமல் தள்ளி நின்றாலே போதுமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
50 ஆண்டுகளில் 3ல் 1 ஆக குறைவு
‘‘பூமி தோன்றிய நாள் முதல் வாழ்ந்த உயிரினங்களில் 90 சதவீதம் இன்று இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வனஉயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் வருகிறது. உலக வனவிலங்கு நிலையத்தின் அறிக்கை படி 50ஆண்டுகளில் விலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உயிரிழப்புக்கு இயற்ைக பேரிடர், எரிமலையின் வெடிப்பு, விண்கற்களின் தாக்கம் மற்றும் கழிவுகள் என்று ஏராளமான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட மிக முக்கிய காரணமாக இருப்பது, மனிதர்கள் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குவது தான். இந்த பூமியில் ஒவ்வொரு உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எனவே ஒரு இனம் அழிந்தாலும் மற்றவை தொடர்ந்து அழியும் அபாயம் நிகழும்,’’ என்றும் உலக வனவிலங்கு நிலையம் தெரிவித்துள்ளது.
யானைகள் – புலிகள் தமிழகத்தில் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் 5தேசிய பூங்காக்கள், 17வனஉயிரின சரணாலயங்கள், 3உயிர்கோள பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளது. 5புலிகள் காப்பகங்களும் உள்ளன. இதன்காரணமாக மாநிலத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்ைகயும், தாவர வகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் மாநில அரசின் வனஉயிரின பாதுகாப்பு நடவடிக்கை மூலம் யானைகள், புலிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்ைககள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 2017-18ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 2,761 யானைகள் இருந்தன. ஆனால் 2024 நிலவரப்படி யானைகளின் எண்ணிக்கை 3,063 என்று தெரியவந்துள்ளது. இந்தவகையில் கடந்த 5ஆண்டுகளில் 302யானைகள் அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழக வனப்பகுதிகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்ைகயும் 306ஆக உயர்ந்துள்ளது என்பது அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்.
அனைத்து தரப்புக்கும் விழிப்புணர்வு அவசியம்
இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக மாற்றுகிறது. ஆனால் சமீபஆண்டுகளாக வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல், சட்டவிரோத வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை வனவிலங்குகள் எதிர்கொள்கின்றன. இந்த அச்சுறுத்தல் எண்ணற்ற விலங்குகள், உயிர்வாழ்வதற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதோடு சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைத்து மனிதர்களின் நல்வாழ்க்ைகக்கும் இடையூறாக அமைகிறது. எனவே விலங்குகள் வாழ்வது மனிதகுலத்திற்கும் மிகநல்லது என்பதை உணரவேண்டும். அனைத்து தரப்பு மக்களிடமும் விலங்குகளை அழிக்ககூடாது என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இதற்கான உறுதியை நாம் எடுத்துக்கொள்வதும் அவசியம் என்பது வனஉயிரின சுற்றுச்சூழல் அமைப்புகளின் கோரிக்கை.
