பார்த்திபன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்றிரவு நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மூலம் இந்த விஷயத்தை நான் தெரிந்துகொண்டேன். குறிப்பிட்ட தனி நபர் ஒருவர், அவரது உதவியாளர் மூலம் கொடுத்த பரிந்துரையின் பேரில் எனது பெயரும், போட்டோவும் கடைசி நேரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மைக்கில் பேசினால் உங்கள் கருத்துகள் அனைத்தும் புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையாகவும் மாறிவிடாது. அது முட்டாள்தனத்தின் உச்சம். எந்த உண்மையும் அறியாமல், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, யாரை பற்றி பேசுகிறீர்களோ அவர்களை விட, பேசுபவர்களை பற்றி அதிகம் தெரியவருகிறது’ என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
