சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தி வருகிறார். ஜனாதிபதி என்பவர் இந்தியாவின் முதல் குடிமகன். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நேரில் சென்று வரவேற்பது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மரபு.
அத்தகைய மரபை தானோ தங்கள் அமைச்சரவையில் ஒருவரோ கடைபிடிக்காதது மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த ஜனநாயக கடமையை செய்ய தவறிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இச்செயலை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருங்காலங்களில் முதல்வர் மம்தா பானர்ஜி, தான் வகிக்கும் பதவியின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.
