- ஐசிசி
- ஆண்கள் டி20 உலகக் கோப்பை
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- இந்தியா
- ஆண்கள்
- T20 உலக கோப்பை
- சேத்தன் சஞ்சு சாம்சன்
சென்னை: ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் சேட்டன் சஞ்சு சாம்சன் இவ்வளவு அதிகாரத்துடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்ததையும், மிக முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதையும் பார்ப்பது உற்சாகமாக இருந்தது.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இந்த இணை இந்தியாவுக்கு மிகவும் அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இவர்களது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.அதன் பின், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் நீஷம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். சாம்சனைத் தொடர்ந்து, 24 பந்துகளில் அதிரடியாக விளையாடி 54 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்திருந்த இஷான் கிஷன் விக்கெட்டினையும் நீஷம் கைப்பற்றி அசத்தினார்.
அடுத்த பந்திலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டினை வீழ்த்தி வந்த வேகத்திலேயே அவரை பெவிலியனுக்கு அனுப்பினார் நீஷம். சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜேம்ஸ் நீஷம். இதனையடுத்து, ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர்.
ஜேம்ஸ் நீஷம் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. ஹார்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் பவுண்டரிகள் எடுக்கத் தடுமாறினர். ஹார்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், மேலும் டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வென்ற பெருமைமிக்க தருணத்தையும் பெற வாழ்த்துகிறேன்.
