தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போர் புரியும் வலிமை தங்களுக்கு இருப்பதாகவும், இதுவரை பழைய ஏவுகணைகளையே பயன்படுத்திய நிலையில் இனி அதிநவீன ஏவுகணைகளை ஏவப்போவதாகவும் ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் “எங்கள் முழு பலத்துடன்” தொடர்ந்து ஈடுபடுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க, இஸ்ரேல் உடனான போரில் அண்டை நாடுகளை தாக்கியதற்காக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரினார். மேலும் ஈரானை தாக்க எதிரி நாடுகள் அண்டைநாடுகளை பயன்படுத்தினால் ஈரான் மீண்டும் அண்டைநாடுகளை தயக்கம் காட்டாது என கூறியிருந்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அண்டை நாடுகளிடம் சரணடைந்து விட்டதாகவும், ஈரான் முழுமையாக சரணடையும் வரை போர் தொடரும் எனவும் கூறியிருந்தார். மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போர் புரியும் வலிமை தங்களுக்கு இருப்பதாக ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை பழைய ஏவுகணைகளையே ஏவியதாகவும், இனி அதிநவீன ஏவுகணைகளை ஏவப்போவதாகவும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
