சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை முன் கூட்டியே முரசறைந்து அறிவிக்கும் வகையில் திருச்சியில் நாளை பிரமாண்ட மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை முன் கூட்டியே முரசறைந்து அறிவிக்கும் வகையில் திருச்சியில் நாளை பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இந்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிடும் பொருட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடுகள் என தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது திமுக. இந்த மாநாடுகள் ஒவ்வொன்றிலும் 1 லட்சம், 1.5 லட்சம் என்று திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் தொடங்கி, வெல்லும் தமிழ்ப்பெண்கள் வீடு வீடான பரப்புரை வரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை எல்லாம் வெறும் டிரெய்லர் தான். மார்ச் 9ம் தேதி (நாளை) திருச்சியில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள் கூடும் மாபெரும் திமுக நிர்வாகிகள் மாநாடு தான் மெயின் பிக்சரே என அறிவித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் மேற்பார்வையில் திருச்சி சிறுகனூரில் மாநாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை முன் கூட்டியே முரசறைந்து அறிவிக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாபெரும் மாநாடு சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. அதோடு வாகன நிறுத்துமிடங்கள் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 40,000 முதல் 50,000 பேருந்துகளை நிறுத்தும் வகையில் விரிவான வாகனநிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதிநவீன எல்இடி திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைப்பு, 110 அடி உயரக் கொடிக்கம்பம், 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் அறுசுவையான சைவ மற்றும் அசைவ உணவு ஏற்பாடுகள், 10 லட்சம் நிர்வாகிகளும் அமர்வதற்குப் போதிய இருக்கைகள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் என நாடே திரும்பி பார்க்கும் வகையில் மிக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு திமுக நிர்வாகிக்கும் தனித்தனியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செய்தியுடன் கூடிய அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி மாநாட்டிற்கான முன்னேற்பாடுககள் குறித்து கலந்தாலோசித்து திமுக மாவட்டங்கள் வாரியாக மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் விவரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் திமுக நிர்வாகிகள் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் அதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இம்மாபெரும் திமுக நிர்வாகிகள் மாநாடு இருக்கும்.

மக்களின் பேராதரவைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாடு முதல்வராவது உறுதி என்று திமுகவினர் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ெவளியிட உள்ளார்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்

  • தமிழ்நாடு முழுக்க இருந்து 10 லட்சம் திமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.
  •  சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் மற்றும் 40,000 முதல் 50,000 பேருந்துகள் நிறுத்தும் வகையில் விரிவான வாகன நிறுத்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  •  அதிநவீன எல்இடி திரையுடன் கூடிய பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
  • 110 அடி உயரத்தில் கழகக் கொடி பறக்கும் வகையில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது.
  •  மாநாட்டில் பங்கேற்கும் லட்சம் நிர்வாகிகளுக்கும் அறுசுவையான சைவ, அசைவ உணவுகள ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
  •  10 லட்சம் நிர்வாகிகள் அமர்வதற்கான இருக்கைகள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: