வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆக விற்பனை!

 

சென்னை: இன்று முதல் LPG கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ஈரான் – அமெரிக்க போர் சூழல் நிலவும் நிலையில், நள்ளிரவில் நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது.

இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது.
எனவே இந்தியா குறுகிய காலத்துக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதனிடையே இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நன்னிரவில் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது.

ஈரான் – அமெரிக்க போர் சூழல் நிலவும் நிலையில், நள்ளிரவில் நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.2043.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: