சிறுமி கொலை வழக்கை சரியாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

சேலம்: சிறுமி கொலை வழக்கை முறையாக விசாரிக்காத மகளிர் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதியில் டிசம்பர் மாதம் இரண்டரை வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அச்சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரணை நடத்தினார். இதில் அச்சிறுமியின் தாயின் கள்ளக்காதலன் பெரியநாயகம்(40) சிறுமியை பாலியல் கொடுமை செய்ததில் இறந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் சுமித்ரா, சேலம் மாநகரம் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிறுமி பாலியல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி விசாரணை நடத்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரிக்கு அறிக்கை அனுப்பினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுமித்ராவை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சேலம் மாநகரம் சூரமங்கலம் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த மோனிகா, தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: