சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-க்கு பிறகு தொண்டர்கள் மற்ற வேலைகளை பார்க்கலாம் என பாஜக பொதுச் செயலாளர் சந்தோஷ் தெரிவித்தார். சென்னையில் நடைபெறும் பாஜக வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்தோஷ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலாக பிற மொழி பேசும் மக்களைக் கவர வியூகம் தேவை என பி.எல். சந்தோஷ் கூறியுள்ளார். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் சிறப்பாக செயல்பட்டவர்கள், தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவர் என அவர் கூறினார்
