சென்னையில் 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை

 

சென்னை: சென்னை காவல்துறையில் 34 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோகிணி, சாஸ்திரி நகர் சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜேஷ்கண்ணன் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்குக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலைச்செல்வி தீவிர ரவுடிகள் ஒழிப்பு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வேலுமணி, ஆயிரம் விளக்கு சட்டம் ஒழுங்குக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் பேசின் பிரிட்ஜ் குற்றப்பிரிவில் இருந்த ஆனந்த் துறைமுகம் சட்டம் ஒழுங்குக்கும், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த சீனிவாசன் பெரியமேடு சட்டம் ஒழுங்குக்கும், சைதாப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த ரவிச்சந்திரன் வேப்பேரி சட்டம் ஒழுங்குக்கும், திருவல்லிக்கேணி குற்றப்பிரிவில் இருந்த கண்ணன் வடபழனி சட்டம் ஒழுங்குக்கும், எழும்பூர் குற்றப்பிரிவில் இருந்த ரஞ்சித் குமார் ராயப்பேட்டை சட்டம் ஒழுங்குக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அயனாவரம் குற்றப்பிரிவில் இருந்த ராமசாமி சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்குக்கும், வடபழனி குற்றப்பிரிவில் இருந்த கிருஷ்ணகுமார் குமரன் நகர் சட்டம் ஒழுங்குக்கும், வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்கில் இருந்த ராஜ்பிரபு தேனாபேட்டை சட்டம் ஒழுங்குக்கும், தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த செந்தில் முருகன் வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்குக்கும், சாஸ்திரி நகர் சட்டம் ஒழுங்கில் இருந்த சுப்பிரமணி நுண்ணறிவு பிரிவுக்கும், வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கில் உள்ள ராஜாராம் நுண்ணறிவு பிரிவுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துறைமுகம் சட்டம் ஒழுங்கில் இருந்த சிலம்பு செல்வன் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், பெரியமேடு சட்டம் ஒழுங்கில் இருந்த திருமால் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், வேப்பேரி சட்டம் ஒழுங்கில் இருந்த ராஜூ கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், ராயப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த வினோத்குமார் திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கில் இருந்த ராமமூர்த்தி மத்திய குற்றப்பிரிவுக்கும், வடபழனி சட்டம் ஒழுங்கில் இருந்த சீனிவாசன் நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த குணசேகரன் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த லலிதா மத்திய குற்றப்பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக புலனாய்வுப்பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த மணிகண்ட கணேஷ் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், நுண்ணறிவு பிரிவில் இருந்த நிர்மலா பாதுகாப்பு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் ஈருந்த ராஜா தேனாம்ேபட்டை குற்றப்பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த வேல்ராஜ் மத்திய குற்றப்பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த வேல்விழி மத்திய குற்றப்பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக புலனாய்வு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த பிரதீப் மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜிவ்காந்தி அரசு மருத்தவமனை காவல் நிலையத்தில் இருந்த அருண் மத்திய குற்றப்பிரிவுக்கும், ஏழுகிணறு குற்றப்பிரிவில் இருந்த சுந்தர் மத்திய குற்றப்பிரிவுக்கும், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த சுமதி மத்திய குற்றப்பிரிவுக்கும், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த சரோஜினி மத்திய குற்றப்பிரிவுக்கும் என மொத்தம் சென்னை பெருநகர காவல்துறையில் 34 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: