அகல் விளக்கு திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: ஜூன் 24ம் தேதி 2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் ‘அகல் விளக்கு திட்டம்’ தொடங்கப்படும் என அறிவித்தார்.

செஞ்சாரு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தின் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ‘அகல் விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திட்டத்தின் விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம், இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அங்கு பிறந்தவர் என்பதால், பெண்கள் அதிகாரமளிப்பின் பாரம்பரியத்தை இணைக்கும் வகையில் இருந்தது. இத்தொடக்க நிகழ்ச்சியுடன், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, பெண் குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘அகல் விளக்கு’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், சமூக வலைதளங்கள், சைபர் குற்றங்கள் மற்றும் பிற இடர்பாடுகளிலிருந்து மாணவிகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பெண் மாணவிகளை இலக்காகக் கொண்ட இத்திட்டம், வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.

‘அகல் விளக்கு’ திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் இணைந்து தனி குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்கள் மூலம், உடல் ஆரோக்கியம், மன அழுத்த மேலாண்மை, சமூக பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் தொடக்கத்திலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 37,767 அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவிகள் பயன்பெறுவதாகக் கணிக்கப்படுகிறது.

2025 ஆகஸ்ட் முதல் 2026 மார்ச் வரை, மாநில அளவில் அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், பெண் குழந்தைகளின் கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அரசு அதிகாரிகள், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, தனியார் பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை ‘அகல் விளக்கு’ திட்டம் உணர்த்துகிறது. இதன் மூலம், தமிழ்நாடு பெண் சமூகத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் வகையில் செயல்படுகிறது.

* திமுக ஆட்சியில் வணிகர்களின் 70% கோரிக்கை நிறைவேற்றம்: விக்கிரமராஜா பெருமிதம்
கடலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே.5ம் தேதி வணிகர்கள் எழுச்சி என்ற தலைப்பில் 43வது மாநில மாநாடு நடக்கிறது. வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இக்கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட ஒன்றிய துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

திமுக ஆட்சியில் வணிகர்களின் 70 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 30 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளன. வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். கடந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மே.5ம் தேதி வணிகர் தினம் அறிவிக்கப்பட்டது. வணிகர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: