சென்னை: தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலம், திராவிட மாடல் 2.0 துவக்கத்திலேயே திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் “முதல் உயர்மட்டச் சாலை”! சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவாகிவரும் இந்த மிக நீண்ட தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலத்தை திராவிட மாடல் 2.0-வின் துவக்கத்திலேயே மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்!” எனவும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
